சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு
x

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இன்று காலையில் தங்கத்தின் விலை சற்று குறைந்தது. இந்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.44,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.5,510-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 உயர்ந்து ரூ.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story