சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது.
சென்னை
சென்னை,
சென்னை, உக்ரைன் - ரஷியா போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனினும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.38,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,831-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதைபோல, வெள்ளி ஒரு கிராம் ரூ.66.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.66.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முகூர்த்த மாதமாக திகழும் வைகாசி மாதம் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொது மக்கள் மத்தியில் கவலையை அளித்துள்ளது.
Related Tags :
Next Story