கெடார் அருகே ஜவுளிக்கடை ஊழியர் வீட்டில் ரூ.4 லட்சம் நகை திருட்டு; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


கெடார் அருகே   ஜவுளிக்கடை ஊழியர் வீட்டில் ரூ.4 லட்சம் நகை திருட்டு; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 2 Oct 2023 6:45 PM GMT (Updated: 2 Oct 2023 6:46 PM GMT)

கெடார் அருகே ஜவுளிக்கடை ஊழியர் வீட்டில் ரூ.4 லட்சம் நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

விழுப்புரம்

செஞ்சி,

கெடார் அருகே உள்ள வாழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராஜ்குமார் (வயது 49). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று ராஜ்குமார் வீட்டை பூட்டி விட்டு, தனது குடும்பத்தினருடன் கடலூர் உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் குடும்பத்தினருடன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 9½ பவுன் நகைகளை காணவில்லை. ராஜ்குமார் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story