பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு


பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு
x

பஸ்சில் பெண்ணிடம் நகை திருடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

ராதாபுரம் அருகே உள்ள பண்ணையார்குளத்தைச் சேர்ந்தவர் பசுங்கிளி (வயது 50). இவர் வள்ளியூர் பஸ்நிலையம் எதிரே உள்ள வங்கியில் அடகு வைத்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை திருப்புவதற்காக வந்தார். வங்கியில் நகையை திருப்பிக்கொண்டு அதனை தனது கைப்பையில் வைத்துவிட்டு ஊருக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறியுள்ளார். பின்னர் பையில் இருந்த நகையை பார்த்தபோது அதனை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story