ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் ஜூன் 13-ந்தேதி உள்ளூர் விடுமுறை


ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் ஜூன் 13-ந்தேதி உள்ளூர் விடுமுறை
x

ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் வருகிற ஜூன் 13-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழக்கரை,

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் பிரசித்தி பெற்ற மஹான் சுல்தான் செய்யது இபுராகிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்கா உள்ளது. இந்த தர்காவில் 849-ம் ஆண்டு சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க திருவிழா வருகிற ஜூன் 12-ந் தேதி மாலை தொடங்கி ஜூன் 13-ந் தேதி அதிகாலை தர்கா மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். இதனை தொடர்ந்து ஜூன் 19-ந் தேதி நிறைவு நிகழ்ச்சியான அஸர் தொழுகைக்குப் பின் கொடியிறக்கம் நடைபெறும்.

இந்த நிலையில் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற ஜூன் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார். விடுமுறை நாளுக்குப் பதிலாக ஜூன் 24-ந்தேதி வேலை நாளாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story