இளநிலை உதவியாளர் மின்சாரம் தாக்கி சாவு


இளநிலை உதவியாளர் மின்சாரம் தாக்கி  சாவு
x
தினத்தந்தி 23 Jun 2023 6:45 PM GMT (Updated: 24 Jun 2023 11:07 AM GMT)

ராசிபுரம் அருகே மின்சாரம் தாக்கி அரசு போக்குவரத்துக்கழக இளநிலை உதவியாளர் பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல்

ராசிபுரம்

உதவியாளர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 38). இவர் ராசிபுரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இளநிலை உதவியாளராக கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி யோகலட்சுமி. இவர்களுக்கு மதன் (3), 11 மாத ஆண் குழந்தை என 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் கந்தசாமி அவரது வீட்டின் அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் மின்விளக்கு எரியவில்லை என்பதற்காக நேற்று காலையில் பிளக் பாயிண்டில் இருந்து பிளக்கை பிடுங்கியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட கந்தசாமி மயங்கி கிடந்தார். அதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சாவு

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கந்தசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்து கந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி அரசு போக்குவரத்துக்கழக இளநிலை உதவியாளர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story