காளியம்மன் கோவில் திருவிழா


காளியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 12 April 2023 12:30 AM IST (Updated: 12 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

நத்தத்தில் காளியம்மன் கோவில் திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது.

திண்டுக்கல்

நத்தம் மீனாட்சிபுரத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், பங்குனி திருவிழா கடந்த 3-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி அன்றைய தினம் கரந்தமலையில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அம்மன் குளத்தில் இருந்து ஊர்வலமாக கரகம் எடுத்து கோவிலுக்கு அழைத்து வருதலும், தோரணமரம் ஊன்றும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவில் நேற்று முன்தினம் முளைப்பாரி, பால்குடம் மற்றும் சந்தனகுடம் ஊர்வலம் நடந்தது. இதில் பக்தர்கள் மாவிளக்கு, அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர். விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து கரகம் அம்மன் குளத்திற்கு மேளதாளம் முழங்க ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று (புதன்கிழமை) அம்மன் மஞ்சள் நீராட்டுதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

1 More update

Related Tags :
Next Story