கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு: மதுரை மாவட்டத்திற்கு 23-ந்தேதி உள்ளூர் விடுமுறை


கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு: மதுரை மாவட்டத்திற்கு 23-ந்தேதி உள்ளூர் விடுமுறை
x

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி வருகிற 23-ந்தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை சித்திரை திருவிழா வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 23-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள்.

இந்த நிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி வருகிற 23-ந்தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திற்கு 23-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.


Next Story