ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் 19-ந்தேதி பிரசாரம்


ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் 19-ந்தேதி பிரசாரம்
x

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வருகிற 19-ந்தேதி பிரசாரம் செய்ய உள்ளார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 27-ந்தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில், காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வருகிற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரசாரம் செய்ய உள்ளார். கருங்கல்பாளையம் காந்தி சிலை, சூரம்பட்டி நால்ரோடு, சம்பத் நகர், வீரப்பன்சத்திரம் மற்றும் அக்ரஹாரம் ஆகிய இடங்களில் தொண்டர்களுடன் சென்று, கமல்ஹாசன் வாக்கு சேகரிக்க உள்ளார்.


Next Story