சிறுமியை கடத்திய வாலிபர் கைது

சிறுமியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ரிஷிவந்தியம்,
பகண்டை கூட்டுரோடு பகுதியை சேர்ந்தவள் 14 வயதுடைய சிறுமி. இவள் திடீரென மாயமானாள். இது குறித்த சிறுமியின் பெற்றோர் பகண்டை கூட்டுரோடு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் லா.கூடலூர் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது 25) என்பவர் சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து சசிகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியையும் மீட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





