கிருஷ்ணகிரி: இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி நீதிமன்றத்தில் சரண்


கிருஷ்ணகிரி: இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி நீதிமன்றத்தில் சரண்
x

மகளின் காதல் திருமணத்தால் விரக்தியில் கொலை செய்ததாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே ஜெகன் இளைஞர் ஒருவர், ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ள நிலையில், பெண்வீட்டாரின் எதிர்ப்பை மீறி அப்பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த இளைஞர் கே.ஆர்.பி. அணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பெண்ணின் உறவினர்கள் நடுரோட்டில் துடிக்க துடிக்க ஜெகனின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்னர். இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இதனிடையே நடுரோட்டில் படுகொலை செய்துள்ள குற்றவாளிகளை கைதுசெய்யக்கோரி உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட எஸ்.பி. சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்னார்.

இந்த சூழலில், இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி சங்கர் நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளார். அப்போது அவர், காதல் திருமணம் செய்து கொண்ட தனது மகளின் கணவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

மகளின் காதல் திருமணத்தால் விரக்தியில் கொலை செய்ததாக நீதிமன்றத்தில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

காதல் விவகாரத்தில் நடுரோட்டில் இளைஞர் துடிக்க துடிக்க ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story