முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு


முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு
x

முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு நடந்தது.

கரூர்

புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் நன்செய் புகழூர் சுப்பிரமணியர், தவுட்டுப்பாளையம், சுப்பிரமணியர், பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

வேலாயுதம்பாளையம் காகிதபுரம் குடியிருப்பில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

இதேபோல் பவித்திரம் பாலமுருகன், வெண்ணெய்மலை முருகன் கோவில்களிலும் கிருத்திகையை முன்னிட் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரனான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story