குலசையில் இருந்து ராக்கெட்டை விண்ணிற்கு செலுத்துவது மிகச் சுலபம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி


குலசையில் இருந்து ராக்கெட்டை விண்ணிற்கு செலுத்துவது மிகச் சுலபம் -  இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி
x

ஆண்டுக்கு 24 சிறிய ராக்கெட்டுகளை ஏவும் வகையில் தளம் அமைக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

தூத்துக்குடி,

குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக இன்று குலசேகரப்பட்டினத்திலிருந்து ரோகிணி எனும் சிறிய வகை ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், திருச்செந்தூரிலிருந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் தளம் அமைப்பதற்கான நிலத்தை தமிழ்நாடு அரசு இஸ்ரோவிடம் ஒப்படைத்துவிட்டது. 2 ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும். இந்தியாவின் 2-வது ராக்கெட் ஏவுதளமாக குலசேகரப்பட்டினம் உள்ளது. குலசேகரப்பட்டினத்திலிருந்து ராக்கெட்டை விண்ணிற்கு செலுத்துவது மிகச் சுலபம். ரூ.1,000 கோடி மதிப்பிலான பணிகள் விரைவில் முடியும் என நம்புகிறேன்.

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தின் மூலம் நேரம், பொருளாதாரம் போன்றவை சேமிப்பாகிறது. ஆண்டுக்கு 24 சிறிய ராக்கெட்டுகளை ஏவும் வகையில் தளம் அமைக்கப்படும். ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரப்பட்டினத்திலிருந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு 10-ல் ஒரு பங்கு செலவே ஆகிறது என்றார்.


Next Story