விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
x
தினத்தந்தி 17 Sep 2023 6:35 AM GMT (Updated: 17 Sep 2023 6:40 AM GMT)

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் தெரிவித்திருப்பதாவது;

"முழுமுதற் கடவுளாம், வினை தீர்க்கும் தெய்வமாம், ஸ்ரீ விநாயக பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடனும், மனமகிழ்ச்சியுடனும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சங்கடங்களையும் தடைகளையும் நீக்க வல்ல விநாயக பெருமானை வணங்கி எந்த செயலைத் தொடங்கினாலும், அந்த செயலை வெற்றியுடன் செய்வதற்குரிய மன உறுதியும், நம்பிக்கையும் தானாக ஏற்பட்டு, அந்தக் காரியம் வெற்றியில் முடியும் என்பதை உணர்ந்து விநாயகர் சதுர்த்தியன்று மக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை பக்திப் பரவசத்துடன் வழிபட்டு மகிழ்வார்கள்.

கேட்கும் வரத்தைக் கொடுக்கும் கடவுளாகக் கருதப்படும் வேழமுகத்து விநாயக பெருமானின் திருவருளால், நாடெங்கும் நலமும், வீடெங்கும் வளமும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்து, அனைவருக்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில் உளமார்ந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்." இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story