மீண்டும் வரலாறு படைப்போம்..நாட்டைக் காப்போம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


மீண்டும் வரலாறு படைப்போம்..நாட்டைக் காப்போம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

அண்ணா தலைமையில் தி.மு.க. இளம்படை ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப்புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

மார்ச் 6! இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள். பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப்புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள்.

அன்று தமிழ்நாட்டைக் காத்தோம்! இன்று மொத்த #இந்தியா-வின் கூட்டாட்சித்தன்மையையும் பன்முகத்தன்மையையும் மதச்சார்பின்மையையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பை நம் தோள்களில் சுமக்கும் அளவுக்கு நம் வலிமை கூடியுள்ளது. மீண்டும் வரலாறு படைப்போம்! நாட்டைக் காப்போம் என பதிவிட்டுள்ளார்.


Next Story