தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்.. எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்


தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்.. எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 17 Jan 2024 12:44 PM GMT (Updated: 17 Jan 2024 12:45 PM GMT)

புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை,சுமார் 3 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ள்ளார்

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,

தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு)100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று, அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் சந்தித்துள்ளனர்.

புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை,சுமார் 3 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். வெற்றி பெற்ற காளைகளும் - வீரர்களும் பரிசுகள் பெற்றார்கள்.

திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை" வரும் 24-ம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் - கீழக்கரைக்கு வருகிறேன்.

தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்! எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம்.என தெரிவித்துள்ள்ளார்


Next Story