'புலிகளின் இடத்தை பேணி காத்து, அவற்றின் அழகை போற்றுவோம்' : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


புலிகளின் இடத்தை பேணி காத்து, அவற்றின் அழகை போற்றுவோம் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

கோப்புப்படம்

புலிகளின் இடத்தை பேணி காத்து, அவற்றின் அழகை போற்றுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

உலக புலிகள் தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

உலக புலிகள் நாளில், சிறப்புமிகு உயிரினமான நம் புலிகளின் பாதுகாப்புக்காக குரல் கொடுப்போம். அருகிவரும் உயிரினமான புலிகளை காப்பதற்கான தமிழ்நாடு அரசின் உறுதியான முயற்சிகள் மிகச்சிறந்த முடிவுகளை அளித்துள்ளது.

2018-ம் ஆண்டில் 264 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022-ல் 306 ஆக உயர்ந்துள்ளது. நாம் அனைவரும் இணைந்து கானகத்தில் புலிகளின் இடத்தை பேணி காத்து, அவற்றின் அழகை போற்றுவோம் என்று அதில் பதிவிடப்பட்டிருந்தது.


Next Story