சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை - போக்சோ கோர்ட்டு தீர்ப்பு


சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை - போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

திருவள்ளூர்

சென்னை ஆவடியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 33). திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா (33). இவர்கள் கடந்த 2015-ம் ஆண்டு காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்த 12 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கணேஷ் மற்றும் ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் இருவர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதியானதால் கணேஷ் மற்றும் ராஜா இருவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் வழங்கக்கோரியும் நீதிபதி தமிழரசி தீர்ப்பளித்தார்.

அரசு தரப்பில் வக்கீல் புவனேஷ்வரி ஆஜரானார்.

1 More update

Next Story