மது விற்றவர் கைது

கபிஸ்தலம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் போலீசார் கபிஸ்தலம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருவைக்காவூர் ஊராட்சி புது கண்டிப்படுகை பகுதியில் பிள்ளையார் கோவில் அருகில் ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புது கண்டிப்படுகை நடுத்தெருவை சேர்ந்த சக்கரவர்த்தி(வயது55) என்றும் அவர் மதுபாட்டில்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





