அனுமதியின்றி கேரளாவுக்கு கருங்கல் கொண்டு சென்ற லாரி பறிமுதல்


அனுமதியின்றி கேரளாவுக்கு கருங்கல் கொண்டு சென்ற லாரி பறிமுதல்
x

கிணத்துக்கடவு அருகே அனுமதியின்றி கேரளாவுக்கு கருங்கல் கொண்டு சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே சொக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துகவுண்டனூர் பிரிவில் வருவாய் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கருங்கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் உரிய அனுமதியின்றி கருங்கற்களை கேரளாவுக்கு ஏற்றி சென்று தெரியவந்தது.

இதனையடுத்து வருவாய்துறையினர் லாரியை பறிமுதல் செய்து கிணத்துக்கடவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த முகமதுரமீஸ் (வயது 26) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story