லாட்டரி சீட்டு விற்றவர் கைது


லாட்டரி சீட்டு விற்றவர் கைது
x

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் அப்டா மார்க்கெட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பதாக கோட்டார் போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு வாழைப்பழம் விற்பனை செய்யும் கடையில் லாட்டரி சீட்டை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடை உரிமையாளர் கிருஷ்ணன்கோவிலை சேர்ந்த மணிகண்டன் (வயது 35) என்பவரை கைது செய்தனர்.


Next Story