ரகளை செய்த வாலிபர் கைது


ரகளை செய்த வாலிபர் கைது
x

ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

விருதுநகர் லட்சுமி நகரை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 21). இவர் தனது நண்பருடன் நள்ளிரவில் விருதுநகர் பழைய பஸ் நிலையம் வந்தார். அப்போது பஸ் நிலையத்தில் உள்ள பாலூட்டும் அறை அருகே படுத்திருந்த வாலிபர் ஒருவரை பணியில் இருந்த பெண் போலீஸ் விசாரித்த போது அந்த வாலிபர், பெண் போலீசை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

அருகில் நின்று கொண்டிருந்த சிவானந்தம், அந்த வாலிபரை கண்டித்த போது அவர் சிவானந்தத்தையும், அவரது நண்பரையும் தாக்க முயன்றதுடன், பாலூட்டும் அறை கண்ணாடியையும் கையால் குத்தி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றி சிவானந்தம் கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் மேற்கு போலீசார் பஸ் நிலையத்திற்கு விரைந்து வந்து ரகளை செய்த வாலிபரை விசாரித்தனர்.

விசாரணையில் அவர் ஆலங்குளம் அருகே உள்ள மேட்டூரை சேர்ந்த ரஞ்சித் குமார் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story