அகதிகள் முகாமை சேர்ந்த இலங்கை பெண்ணுக்கு இந்திய பாஸ்போர்ட் -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


அகதிகள் முகாமை சேர்ந்த  இலங்கை பெண்ணுக்கு இந்திய பாஸ்போர்ட் -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

அகதிகள் முகாமை சேர்ந்த இலங்கை இளம்பெண்ணுக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்குவது குறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


அகதிகள் முகாமை சேர்ந்த இலங்கை இளம்பெண்ணுக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்குவது குறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இலங்கை இளம்பெண்

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ராயனூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஹரினா என்ற இளம்பெண், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

என் பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள். அவர்கள் இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்ற போது தமிழகத்துக்கு அகதிகளாக வந்தார்கள்.

நான் கரூர் கோடாங்கிபேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 2002-ம் ஆண்டு பிறந்தேன். பள்ளிப்படிப்பை கரூரிலும், கோவையில் கல்லூரி படிப்பையும் முடித்தேன்.

தற்போது வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடிவு செய்துள்ளேன். இதனால் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தேன். ஆனால் நான் இந்திய குடிமகள் இல்லை என்று கூறி எனது விண்ணப்பத்தை நிராகரித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவை ரத்து செய்து எனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் வழங்கலாம்

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

பாஸ்போர்ட் சட்டப்பிரிவு 20-ல் இந்திய குடிமகனாக இல்லாதவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவது குறித்து கூறப்பட்டு உள்ளது. அதில், பொதுநலன் கருதி மத்திய அரசு நினைத்தால், இந்திய குடிமகனாக இல்லாதவர்களுக்கும் பாஸ்போர்ட் வழங்கலாம் என கூறப்பட்டு உள்ளது. மனுதாரர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்து உள்ளார்.

எனவே மனுதாரருக்கு பாஸ்போர்ட் சட்டம் 1967,் பிரிவு 20-ன் கீழ் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்.

மனுதாரர் மீண்டும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவரது விண்ணப்பத்தை மத்திய உள்துறை செயலாளர் பரிசீலித்து, விரைவில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story