மதுரை: ஜந்து முளி கோவிலில் ஆண்கள் மட்டும் பங்குபெறும் ஆடி படையல் விழா - 100 கிடா வெட்டி விருந்து


மதுரை: ஜந்து முளி கோவிலில் ஆண்கள் மட்டும் பங்குபெறும் ஆடி படையல் விழா - 100 கிடா வெட்டி விருந்து
x

கொட்டாம்பட்டி அருகே ஜந்து முளி கோவில் ஆடி படையல் விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

கொட்டாம்பட்டி,

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள வீரசூடாமணிபட்டி, சுந்தர்ராஜபுரம், கச்சிராயன்பட்டி ஆகிய மூன்று கிராமங்களுக்கு சொந்தமான ஜந்து முளி சுவாமி கோவில் கல்லு படையல் ஆண்டு தோறும் ஆடி மாதம் நடைபெறும்.

இந்த ஆண்டும் ஜந்து முளி சுவாமி ஆடி கல்லு படையல் விழாவை முன்னிட்டு பொதுமக்கள் சுவாமிக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட 100 கிடா மற்றும் 800 சேவல்களை கோவில் அருகே பலியிடப்பட்டது.

இந்த படையலின் சிறப்பு அம்சம் மூன்று கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கிராம பெரியவர்கள் ஆண்கள் மட்டுமே பலியிடப்பட்ட கிடா சேவல்களை சுத்தம் செய்து தீயில் வாட்டி வெட்டினர்

அனைத்தும் வெட்டிய பின்பு வரிசையாக அமைக்கபட்டு இருக்கும் அடுப்பில் மண் கலையத்தில் சுத்தம் செய்த கரியை தண்ணீருடன் உப்பு வேப்பிலை போட்டு சமைத்து கோவிலின் முன்பு சுவாமிக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்தனர். படையல் நிகழ்ச்சியில் பக்கத்து ஊரில் இருந்து வரவழைக்கப்பட்ட இஸ்லாமியர் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது.

படையல் பூஜைகள் முடிந்த பின்னர் விருந்தில் உப்பு வேப்பிலையால் மட்டுமே சமைக்கப்பட்ட கரி பரிமாரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story