வரத்து குறைவால் மக்காச்சோளம் விலை உயர்வு


வரத்து குறைவால் மக்காச்சோளம் விலை உயர்வு
x

வரத்து குறைவால் மக்காச்சோளம் விலை உயர்ந்தது.

கரூர்

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், ஓலப்பாளையம், சோளக்காளிபாளையம், வெங்கம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளத்தை கரும்பு மற்றும் மஞ்சள் பயிரில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் பயிரிட்டு வருகின்றனர். மக்காச்சோளம் கதிர் நன்றாக விளைந்ததும் கூலியாட்கள் மூலம் சோளக்கதிரை பறித்து நன்றாக உலர வைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர். பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், சாலைப்புதூரில் செயல்பட்டு வரும் வேளாண்ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

இதனை வாங்கும் வியாபாரிகள் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மக்காச்சோள மாவு தயாரிக்கும் மில்களுக்கும், மாடு, கோழி தீவனம் தயாரிக்கும் மில்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். இந்தநிலையில் கடந்த வாரங்களில் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.20-க்கு விற்பனையானது. இந்த வாரம் வரத்து குறைவால் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.22 வரை விற்பனையானது. மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story