மொபட்டில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது


மொபட்டில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது
x

மொபட்டில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

விக்கிரமங்கலம்:

தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் பாண்டி பஜார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்து, அதில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர், காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ஜெயராமன்(வயது 42) என்பதும், அவர் விற்பனை செய்ய மொபட்டில் மறைத்து 12 மது பாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, மதுபாட்டில்களுடன் மொபட்டை பறிமுதல் செய்தனர்.


Next Story