மொபட்டில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது

மொபட்டில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
விக்கிரமங்கலம்:
தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் பாண்டி பஜார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்து, அதில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர், காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ஜெயராமன்(வயது 42) என்பதும், அவர் விற்பனை செய்ய மொபட்டில் மறைத்து 12 மது பாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, மதுபாட்டில்களுடன் மொபட்டை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





