இடஒதுக்கீட்டிற்காக போராடிய 21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு


இடஒதுக்கீட்டிற்காக போராடிய 21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 27 Sep 2023 3:30 PM GMT (Updated: 27 Sep 2023 4:56 PM GMT)

21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்க ரூ. 5.70 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ், 1987-ம் ஆண்டு இடஒதுக்கீட்டிற்காக போராடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 21 சமூகநீதி போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தில் 1.12 ஹெக்டேர் ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தில் 21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்க 5 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


Next Story