இடஒதுக்கீட்டிற்காக போராடிய 21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு

21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்க ரூ. 5.70 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை,
சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ், 1987-ம் ஆண்டு இடஒதுக்கீட்டிற்காக போராடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 21 சமூகநீதி போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தில் 1.12 ஹெக்டேர் ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தில் 21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்க 5 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





