தமிழ் புத்தாண்டு மகிழ்ச்சி, நிறைவை அளிக்கட்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து


தமிழ் புத்தாண்டு மகிழ்ச்சி, நிறைவை அளிக்கட்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
x

கோப்புப்படம் 

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழ் புத்தாண்டு தினத்தில் அனைவருக்கும் குறிப்பாக எனது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு அன்பான நல்வாழ்த்துக்கள். புத்தாண்டு அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி மற்றும் நிறைவை அளிக்கட்டும். புதிய உத்வேகம், ஆற்றல் மற்றும் உற்சாகத்துடன் தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.



Next Story