மதிமுக தொடர்ந்து தனித்தே இயங்கும் - பொதுச்செயலாளர் வைகோ பேட்டி


மதிமுக தொடர்ந்து தனித்தே இயங்கும் - பொதுச்செயலாளர் வைகோ பேட்டி
x

திமுகவுடன் கட்சியை இணைக்கும் நோக்கம் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை,

மதிமுகவை திமுகவோடு இணைத்துவிடலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருந்தார். அதில் மதிமுகவை அதன் தாய் கழகமான திமுகவுடன் இணைக்க வேண்டும் என்றும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தன்னிச்சையாக எடுத்த நடவடிக்கைகளால் கட்சி பாதிக்கப்படுவது குறித்து தான் கடிதம் எழுதியதாகவும் , அந்த கடிதங்களுக்கு பதில் வரவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்த கடிதம் ம.தி.மு.க.வினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திமுகவுடன் கட்சியை இணைக்கும் நோக்கம் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "மதிமுக முக்கிய காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 70 சதவீதம் மதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. துரைசாமி அனுப்பிய கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளராக நான் அலட்சியப்படுத்துகிறேன். இரண்டு வருடங்களுக்கு கட்சிக்கு வராமல் தற்போது அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. நாங்கள் சிலவற்றை அலட்சியப்படுத்துகிறோம். நிராகரிக்கிறோம். எல்லா இடங்களிலும் தேர்தல் அமைதியாக ஒற்றுமையாக நடந்தது. இனிமேல் அவரின் பேச்சுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன். மதிமுக 30 வருடங்களாக தனித்தே இயங்குகிறது: மதிமுக இனியும் தொடர்ந்து தனித்தே இயங்கும்" என்று வைகோ தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story