மரவாபாளையம் பகுதியில் மருத்துவ முகாம்


மரவாபாளையம் பகுதியில் மருத்துவ முகாம்
x

மரவாபாளையம் பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

கரூர்

மரவாபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்றனர். பின்னர் வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை செய்தனர். பின்னர் தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து, மருந்து மாத்திரைகள் வழங்கினர்.


Next Story