மேல்மருவத்தூர் அருகே பா.ஜ.க. பிரமுகர் கட்டையால் தாக்கி கொலை


மேல்மருவத்தூர் அருகே பா.ஜ.க. பிரமுகர் கட்டையால் தாக்கி கொலை
x

மேல்மருவத்தூர் அருகே பா.ஜ.க. பிரமுகர் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு

தாக்குதல்

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரை அடுத்த ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் குப்பன் (வயது 47). கொத்தனார். பா.ஜ.க. பிரமுகர். இவருக்கும் இவரது பக்கத்து வீட்டுக்காரரான வேணு (57) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி குப்பனின் மைத்துனர் ரமேஷ், வேணுவிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அங்கு இருந்த வேணுவின் மனைவி முனியம்மாள் (52), மகன்கள் பூங்காவனன் (31), சரவணன் (28) ஆகியோர் ரமேஷையும், குப்பனையும் கட்டையாலும், இரும்பு கம்பியாலும் தாக்கி உள்ளனர்.

சாவு

இதில் படுகாயம் அடைந்த குப்பன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனினின்றி பரிதாபமாக இறந்தார். குப்பனின் மனைவி பத்மா அளித்த புகாரின்பேரில் வேணுவின் மகன்கள் பூங்காவனன், சரவணன் ஆகியோரை மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை கைது செய்து மதுராந்தகம் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

தலைமறைவான வேணு, முனியம்மாள் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

1 More update

Next Story