மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்பு


மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்பு
x

பெரம்பலூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்கப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் தீரன் நகர் சாலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த 40 வயது மதிக்கத்த ஆண் ஒருவரை போலீசார் பாதுகாப்பாக மீட்டு அருகே உள்ள கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் இந்த செயலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டினார்.


Next Story