ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில் - ரூ.1,620 கோடியில் ஒப்பந்தம்


ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில்  - ரூ.1,620 கோடியில் ஒப்பந்தம்
x

ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரெயில் இயக்க ரூ.1,620 கோடி மதிப்பில் அதிநவீன சிக்னல் ரயில் இயக்க கட்டுமான பணிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது

சென்னை,

சென்னை மெட்ரோ நிர்வாகம் தற்போது புதிய வசதியை அறிமுகப்படுத்தி அதற்கான ஒப்பந்தத்தை போட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் தானியங்கி மெட்ரோ ரெயில் இயக்கபட உள்ளது.

ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரெயில் இயக்க ரூ.1,620 கோடி மதிப்பில் அதிநவீன சிக்னல் ரெயில் இயக்க கட்டுமான பணிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஹிட்டாச்சி ரெயில் எஸ்.பி.ஏ மற்றும் ஹிட்டாச்சி ரெயில் எஸ்டிஎஸ் இந்தியா பிரைவேட் நிறுவனங்களுடன் மெட்ரோ ஒப்பந்தம் போட்டுள்ளது. குறைந்தபட்ச இடைவெளியான 1 நிமிடம் 30 விநாடிகள் இடைவெளியில் தானியங்கி ரெயில் இயக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.


Next Story