மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த, சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!


மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த, சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!
x

மாடு முட்டியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை நேரில் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் கூறினார்.

சென்னை,

சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ. பகுதியில் சாலையில் கட்டுப்பாடின்றி திரிந்த பசு மாடு, அவ்வழியே சென்ற பள்ளிக் குழந்தையை முட்டித் தூக்கி வீசியதில் அந்தக் குழந்தை படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாடு முட்டி சிறுமி படுகாயமடைந்த விவகாரத்தில், மாட்டின் உரிமையாளரான விவேக் என்பவர் மீது உயிருக்கு ஆபத்து விளைவித்தல் உட்பட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதோடு, சுகாதாரத்துறை சார்பில் ரூ.2000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாடு முட்டியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை நேரில் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் கூறினார்.


Next Story