மாங்காட்டில் மனவளர்ச்சி குன்றிய மகளை தீவைத்து எரித்துவிட்டு தாய் தற்கொலை


மாங்காட்டில் மனவளர்ச்சி குன்றிய மகளை தீவைத்து எரித்துவிட்டு தாய் தற்கொலை
x

மாங்காட்டில் மனவளர்ச்சி குன்றிய மகளை தீ வைத்து எரித்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

மாங்காடு அடுத்த கொளப்பாக்கத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 52), தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி சுலோச்சனா (48), இவர்களுக்கு தினேஷ்குமார் (23) என்ற மகனும், மீனாட்சி (18) என்ற மகளும் உள்ளனர். மீனாட்சிக்கு மனவளர்ச்சி, உடல் வளர்ச்சி இல்லாமல் இருந்து வந்ததால் அவரது தாய் வீட்டில் இருந்து பராமரித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன் நடராஜன், மகன் தினேஷ்குமார் இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் சுலோச்சனாவும் அவரது மகள் மீனாட்சி மட்டும் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு சுலோச்சனா திடீரென தனது உடலிலும் மகள் மீனாட்சி உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஒடிசென்று பார்த்தபோது இருவரின் உடலிலும் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்து இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சுலோச்சனா நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோனார். மகள் மீனாட்சி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாங்காடு இன்ஸ்பெக்டர் ராஜி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது மன வளர்ச்சி குறைந்த மகளால் மனமுடைந்த சுலோச்சனா, தனக்கு பின்னால் தனது மகளின் நிலை என்னாகுமோ என்ற அச்சத்தில் மண்எண்ணெய் எடுத்து தன் மீதும் மகளின் உடலிலும் ஊற்றி தீ வைத்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story