ஈரோடு: தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய், மகன் உயிரிழப்பு


ஈரோடு: தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய், மகன் உயிரிழப்பு
x
தினத்தந்தி 2 Sept 2023 8:09 AM IST (Updated: 2 Sept 2023 11:40 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய், மகன் உயிரிழந்தனர்.

ஈரோடு,

தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இதனிடையே, தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளில் நேற்று மழை பெய்தது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் நேற்று மழை பெய்தது.

இந்நிலையில், ஈரோட்டின் பெரிய அக்ரஹாரம் பகுதியில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சாரம்மா (வயது 34), அவரது மகன் அக்தர் (வயது 12) ஆகிய இருவர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த தாய் - மகனின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story