மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

ஏர்வாடி அருகே உள்ள மாவடி உடையடிதட்டை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராஜேந்திரன் (வயது 39). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் டோனாவூர் அருகே உள்ள காந்திபுரத்தில் நடந்த காளி பூஜையில் பங்கேற்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை தசரா குழு பிறை அருகே நிறுத்தி விட்டு, காளி பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை மர்மநபர் திருடி சென்றதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் ைசக்கிளை திருடிய மர்மநபரை தேடி வருகின்றனர்.


Next Story