மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது


மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது
x

மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் வெங்கமேட்டை சேர்ந்தவர் கவுதம் குமார் (வயது 23). இவர் சம்பவத்தன்று அருகம்பாளையம் பகுதியில் உள்ள கோவில் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு திரும்பி வந்து பார்த்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கவுதம்குமார் கொடுத்த புகாரின்பேரில், வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், மோட்டார் சைக்கிளை திருடி சென்றது அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story