கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை: 4 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் - சென்னை கோர்ட்டு தீர்ப்பு


கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை: 4 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் - சென்னை கோர்ட்டு தீர்ப்பு
x

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை கொலை செய்த 4 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சென்னை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது,.

சென்னை

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 30). கள்ளக்காதல் விவகாரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு இவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் (29), ஜோசுவா (20), பாபு (40), வெங்கட சுப்பையா (58) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை 16-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புவனேஸ்வரி, ராஜேஷ் உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.


Next Story