மனைவி, 2 குழந்தைகளை கொலை செய்தவர் கைது


மனைவி, 2 குழந்தைகளை கொலை செய்தவர் கைது
x

மனைவி, 2 குழந்தைகளை கொலை செய்தவர் கைது

மதுரை

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர் அருகே பெரிய இலந்தைகுளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 39). விவசாயி. இவர் குலமங்கலம் பகுதியில் ஒரு கொய்யா தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அதை குடும்பத்துடன் தங்கி கவனித்து வந்தார். கடன் பிரச்சினையால் இவர் கடந்த 18-ந் தேதி மனைவி சுரேகா(35), மகள் யோகிதா(16), மகன் மோகனன்(12) ஆகிய 3 பேரையும் கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்தார். மேலும் தானும் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் முருகனை, மனைவி உள்பட 3 பேரை கொலை செய்ததாக முருகனை அலங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story