கோழி வியாபாரியிடம் ரூ.14 ஆயிரத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமிகள்


கோழி வியாபாரியிடம் ரூ.14 ஆயிரத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமிகள்
x

வெள்ளியணை அருகே கோழி வியாபாரியிடம் ரூ.14 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர்.

கரூர்

திருச்சி மாவட்டம் முசிறி அழகாபட்டி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). இவர் தற்போது கரூர் வெங்கமேடு எஸ்.பி. காலனியில் தாத்தா பொன்னுச்சாமி (வயது 72) வீட்டில் தங்கியிருந்து அவர் நடத்தி வரும் கோழிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடைக்கு தேவையான கோழிகளை வாங்குவதற்காக நேற்று முன்தினம் அதிகாலையில் காணியாளம்பட்டி அருகே உள்ள மஞ்சா நாயக்கன்பட்டியில் கூடும் கோழி சந்தைக்கு தனது தாத்தாவை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வெள்ளியணையை அருகே உள்ள அய்யம்பாளையம் காலனி பகுதியில் கரூர்-மணப்பாறை ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் காரில் வந்த மர்ம ஆசாமிகள் 4 பேர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து விக்னேஷ் கண்ணில் ஸ்பிரே அடித்து மிரட்டி, அவர் தாத்தா பொன்னுச்சாமி வைத்திருந்த ரூ.14 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story