தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளா விரைந்தனர்


தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளா விரைந்தனர்
x

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளா விரைந்தனர்

ராணிப்பேட்டை

கேரளாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் இடை விடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக கேரள மாநில நிர்வாகம் தேசிய பேரிடர் மீட்பு படையை அனுப்ப கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

வேண்டுகோளுக்கிணங்க அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் உத்தரவின் பேரில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையில் இருந்து வயநாடு, பத்தினம்திட்டா, மலப்புரம், கன்னூர், கோட்டயம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய பகுதிகளுக்கு பேரிடர் மீட்பு வீரர்கள் ஏழு குழுவினர் அதிநவீன மீட்பு கருவிகளுடன் மீட்புப்படை வாகனத்தில் சென்றனர்.

1 More update

Related Tags :
Next Story