தேசிய மக்கள் நீதிமன்றம்


தேசிய மக்கள் நீதிமன்றம்
x

செஞ்சியில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.

விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சியில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் வட்டசட்ட பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான நலினக்குமார் தலைமையில் மாஜிஸ்ட்ரேட் மனோகரன் முன்னிலையில் விபத்து உள்பட 321 வழக்குகள் சமரச அடிப்படையில் முடிக்கப்பட்டு 3 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரத்து 700 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. தொடர்ந்து விபத்து வழக்குகளில் தீர்வு காணப்பட்ட நபர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அரசு வக்கீல் கிருஷ்ணன், பார் அசோசியேஷன் தலைவர் சக்தி ராஜன், செயலாளர் மணிகண்டன், அட்வகேட் அசோசியேஷன் தலைவர் தர்மலிங்கம், மூத்த வக்கீல்கள் கண்ணதாசன், அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story