ஸ்பிக் நகர் அருகேஓட்டலில் பணம் திருட்டு

ஸ்பிக் நகர் அருகே ஓட்டலில் பணம் திருடப்பட்டுள்ளது.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகர் 3-வதுதெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து மகன் கார்த்திக் (வயது 29). இவர் எம். சவேரியார்புரத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை 1 மணிக்கு ஓட்டலை அடைத்து விட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் நேறறு காலை 7 மணி அளவில் ஓட்டலுக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கடைதிறந்து கிடந்துள்ளது. கடை உள்ளே பணப்பெட்டியில் இருந்த ரூ.800 திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





