நெல்லை-திருச்செந்தூர் ரெயில் பாதை பராமரிப்பு பணி 4-ந்தேதி நிறைவு பெறும் - தெற்கு ரெயில்வே தகவல்


நெல்லை-திருச்செந்தூர் ரெயில் பாதை பராமரிப்பு பணி 4-ந்தேதி நிறைவு பெறும் - தெற்கு ரெயில்வே தகவல்
x

நெல்லை-திருச்செந்தூர் இடையிலான வழித்தடத்தில் 6-ந்தேதி முதல் ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நெல்லை,

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக நெல்லை-திருச்செந்தூர் இடையிலான ரெயில் பாதை பல இடங்களில் சேதமடைந்தது. இதன் காரணமாக 17-ந்தேதி முதல் இந்த வழித்தடத்தில் ரெயில்களின் இயக்கம் தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிநவீன உபகரணங்களைக் கொண்டு பொறியாளர்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் இரவு பகலாக பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகள் அனைத்தும் 4-ந்தேதி மாலைக்குள் நிறைவு பெறும் எனவும், அதன் பின்னர் தண்டவாளத்தில் இன்ஜின்களை இயக்கி சோதனை செய்து 6-ந்தேதி முதல் நெல்லை-திருச்செந்தூர் இடையிலான பாதையில் ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.



Next Story