போலீசாரின் சிறப்பு விசாரணை முகாம்


போலீசாரின் சிறப்பு விசாரணை முகாம்
x

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீசாரின் சிறப்பு விசாரணை முகாம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து பெற்ற மொத்தம் 25 கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைத்தார். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் நடைபெறும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் மாவட்ட போலீஸ் அலுவலகம் வருவதற்கு ஏதுவாக போலீசார் சார்பில் பாலக்கரையில் இருந்து போலீஸ் அலுவலகத்திற்கும், மீண்டும் போலீஸ் அலுவலகத்திலிருந்து புதிய பஸ் நிலையம் செல்லவும் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது, என்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தெரிவித்தார்.

1 More update

Next Story