என்.எல்.சி. விவகாரம் – சீமான் தலைமையில் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு..!


என்.எல்.சி. விவகாரம் – சீமான் தலைமையில் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு..!
x

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், என்.எல்.சி. விரிவாக்க பணியை கண்டித்து போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடலூர்,

கடலூரில் கடந்த சில நாட்களாக சேத்தியாத்தோப்பு அருகே விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டுள்ள நிலையில், இயந்திரங்கள் மூலம் நிலங்கள் சமன்படுத்தும் பணி தொடங்கியது. மேலும், வளையமாதேவியில் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில் கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கியன. இதில் அறுவடைக்கு தயாராக இருக்கும் விளைந்த பயிர்கள் அளிக்கப்பட்டன.

என்.எல்.சி. நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இன்று அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், என்.எல்.சி. விரிவாக்க பணியை கண்டித்து நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் வரும் 5-ஆம் தேதி போராட்டம் நடத்த அனுமதி கேட்டு எஸ்பி-யிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை, போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது.

முன்னதாக நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்திற்கு முன்பாக, பாமக சார்பில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது குறிப்பிடத்தக்கது.


Next Story