அண்ணாமலையிடம் செயல்பாடு இல்லை: கார்த்தி சிதம்பரம் எம்.பி விளாசல்


அண்ணாமலையிடம் செயல்பாடு இல்லை: கார்த்தி சிதம்பரம் எம்.பி விளாசல்
x

தமிழகத்தில் திராவிட கட்சிகள் வேறூன்றி நிற்கிறது. அவ்வளவு எளிதில் மக்கள் மனதில் இருந்து அதனை நீக்க முடியாது என்று கார்த்தி சிதம்பரம் பேசினார்.

சென்னை,

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: -

எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து பேசினால் அதிமுக வாக்காளர்கள் தங்கள் பக்கம் சாய்வார்கள் என்ற அல்ப ஆசையில் மோடி பேசியுள்ளார். கீழ்மட்ட அதிமுக தொண்டர்கள் இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு தான் இருப்பார்கள். தி.மு.க. காணாமல் போகும் என மோடி பேசியிருக்கிறார். இதுபோல இன்னும் நிறைய பேசுவார். ஏனெனில், தமிழகத்தில் திராவிட கட்சிகள் வேறூன்றி நிற்கிறது. அவ்வளவு எளிதில் மக்கள் மனதில் இருந்து அதனை நீக்க முடியாது.

அண்ணாமலையிடம் இருந்து நிறைய சத்தம் வருகிறது. ஆனால், செயல்பாடு இல்லை. எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பாஜகவில் இணையவுள்ளதாக கூறுவது, பாஜக கூறிய 15 லட்சம் ரூபாய் போலத்தான் அதுவும். தமிழகத்தில் அண்ணாமலையை பூதக்கண்ணாடி ஸ்பீக்கர் போட்டு காட்டுகிறீர்கள். பாஜகவின் உண்மையான நிலை வாக்கு எண்ணும் போது தெரிந்துவிடும்.

என்று அவர் கூறினார்


Next Story