"கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கூடாது..."- ஐகோர்ட்டு மதுரை கிளை அதிரடி உத்தரவு


கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கூடாது...- ஐகோர்ட்டு மதுரை கிளை அதிரடி உத்தரவு
x

கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிக்கவோ கூடாது என ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.

மதுரை,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மல்லா கோட்டை கிராமத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் விழாவில் முதல் மரியாதை அளிக்க கூடாது என்றும், கோவில் வழிபாட்டில் அனைவரையும் சமமாக நடத்த உத்தரவிட கோரியும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரனைக்கு வந்தது. அப்போது, கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிப்பதோ செய்ய கூடாது என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மேலும், கோவில்களில் ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்துவது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்றும் ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


Next Story