வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

குடும்பத்தகராறில் வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

மேற்கு வங்க மாநிலம் பர்கானா பகுதிக்குட்பட்ட பசின் பாரா பகுதியை சேர்ந்தவர் சுனிதா சர்தார் (வயது 23), கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நித்யானந்தா முண்டா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்தநிலையில் இவர்கள் 2 பேரும் கரூரில் உள்ள கொசுவலை தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். மேலும் அங்குள்ள ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த சுனிதா சர்தார் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை மீட்டு காந்தி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுனிதா சர்தார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story